Saturday, January 26, 2008

நாறிப்போனது.........?

கள்ளக்காதல் எதிரொலி
கணவன் கொலை
மனைவி கைது.

மணமான முன்று நாளில்
மணப்பெண் மாயம்
மாஜி காதலனை
போலீஸ் தேடுகிறது.

கள்ளக் காதலனுடன்
சல்லாபத்தில் இருந்த மனைவி
கண்ணால் கண்ட ஆத்தித்தில்
மனைவியைக் கொன்ற
கணவன் கைது.

செய்திகள் படித்து
சாக்கடையான மனதில்
எதிர் வீட்டுத் திருமதி
கல் எறிந்தாள்
நாறிப்போனது மனது.

நாளைய செய்திக்கு
நானும் தயாரானேன்.

1 comment:

Anonymous said...

கவிதை சூப்பர்.
நாளைய தினத்தந்தில உங்க போட்டோவை எதிர்பார்க்கிறேன்.

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads