Sunday, March 08, 2009

பெங்களூர் அருகே பண்ணை வீட்டில் நடனத்துடன் மது விருந்து: 110 பேர் கைது





பெங்களூர் அருகே பண்ணை வீட்டில் நள்ளிரவு நடனத்துடன் நடந்த மது விருந்தில் பங்கு கொண்ட 20 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராம்நகர் மாவட்டத்தில் சுஞ்சனகுப்பே அருகே தொட்ட ஆலதமரா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு பண்ணை வீட்டில் சனிக்கிழமை நள்ளிரவு இளம் பெண்களும், ஆண்களும் கும்பலாக அதிக சப்தத்துடன் பாடல்களைப் போட்டு மது அருந்தி நடனமாடிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து ராமநகரம் மாவட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குறிப்பிட்ட கிராமத்தில் ஒதுக்குப் புறத்தில் உள்ள பண்ணை வீட்டில் போலீசார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, இளம் பெண்களும், ஆண்களும் அரைகுறை ஆடையணிந்து மது போதையில் மேற்கத்திய பாடல்களுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தனர். மேலும்.......


இலங்கைத் தமிழர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்: ஜெயலலிதா


வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் இரு கண்கள்: கருணாநிதி

No comments:

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads