Wednesday, December 12, 2007

கலைஞரே இது நாயமா?

இன்னாப்பா இது அநியாயமா கீது.
இலவசமா டிவி பொட்டி தர்ரேன்னு சொன்னதாலதான
ஓட்டுப்போட்டோம்.இப்போ டிவிய வித்தா குண்டாஸ்ல
போட்டுருவோம்னா இன்னாபா நாயம்.
சென்னைல டிவிபொட்டி இல்லாத குடிசை
ஏதாவது கீதாபா. குந்த எடம் கீதோ இல்லையோ
அங்க டிவிபொட்டிகீது. குடிக்க கஞ்சி கீதோ இல்லையோ
கந்துவட்டிக்கு கடன்வாங்கியாவது கலர்டிவி வாங்கி
வச்சுக்கறோம்.(இதுக்கு மேல ராயபுரம் 'கடுக்கா' ராசுவோட
சென்னை தமிழ் எனக்கு வரலைங்க) இதுக்கு மேல
இலவச கலர்டிவிய வாங்கி நாங்க எங்க வச்சுக்கறது.
அதை அடிதடி போட்டு வாங்கறது
இன்னாத்துக்கு. சேட்டு கடைல வைக்கறதுக்கோ
இல்லாங்காட்டி விக்கறதுக்கோதான். இப்போ இந்த
டிவி பொட்டிய பாத்தா ஆசைவரல ஆத்திரம்தான்
வருது. ஆத்திர அவசரத்துக்கு அடமானம் வைக்கக்கூட
முடியாத பொருளை எதுக்கு அடைகாத்து வச்சிருக்கனும்னு
தோணுது.ஒரு நேரம் பத்தா ஏதோ கடத்தல் பொருளை
குடிசைக்குள்ள பதுக்கி வச்சிருக்க மாதிரி பயமாக்கூட இருக்குப்பா.
அதைப்பாத்தாலே குண்டாஸ் ஆக்ட்டும் புழல் ஜெயிலும்தான்
ஞாபகத்துக்கு வருதுப்பா.
கலைஞரய்யா இது நாயமா?

No comments:

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads