Tuesday, November 27, 2007

பாம்பாட்டிக்கு பாம்பால் சாவு - மூன்றாவது கோணம்.

தான் செய்ய அச்சப்படும் எதையாவது மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு அதனாலேயே அழிவு என்று சொல்லி வக்கிரமாகச் சந்தோசப்படுவது மனித இயல்பு.
இதுவும் அப்படி அதீத அச்சத்தால் சொல்லப்பட்டதுதான். பாம்பைக்கண்டு பயந்தவர்கள்தாம் அதிகமாக பாம்புகளால் மரணமடைகின்றனர், பாம்பாட்டிகள் அல்ல.
யானையும் பாகனுக்குக் குறி வைப்பதில்லை. மதம் பிடித்துக் கூட்டத்தை நோக்கி ஓடும் யானையை அடக்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்வோடு தங்கள் உயிரையே பணயம் வைத்துச் செயல்படும் பல பாகர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஓரிருவர் உயிரிழக்கக்கூடும்.
பாம்பு, யானை இருக்கட்டும்.... உங்கள் வாகனத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல் ஓட்டிச் சென்றால், அதுகூட ஆபத்துதான்.எதையுமே முழுமையாகப் புரிந்துகொண்டு கையாண்டால் பாம்பு, புலி, யானை, வாகனம், வாழ்க்கை எதுவுமே ஆபத்தல்ல.
-ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

No comments:

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads