Monday, November 07, 2005

கவிஞர் காத்தவராயன் கவிதை - 1



வாராது வந்த மாமழையே!
வணங்குகிறேன்.

நீரி(யி)ன்றி நாவரண்டு
நின்றோம்!

பூவாய் தூறினாய்! புயலாய் மாறினாய்!
தலைமூழ்கி தவிக்கின்றோம்.

கொட்டித் தீர்த்தது போதும்கொஞ்சம்
ஓய்வெடுத்துக்கொள்.

வாராது வந்த மாமழையே!
உன் வருகைக்கு
நன்றி சொல்ல
நான் உயிரோடிருக்க வேண்டும்.

1 comment:

நக்கீரன் said...

நல்லா முங்கி முத்தெடுத்திருப்பீங் போலிருக்கு

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads